சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெயிக்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில் சிஎஸ்கே அனியின் கேப்டனாக தோனிக்கு பதிலாக ருதுராஜ் கெயிக்வாட் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சேப்பாக்கத்தில் நாளை நடைபெறும் முதல் ஆட்டத்தில் ஆர்சிபி அணிக்கு எதிராக சிஎஸ்கே விளையாடவுள்ளது.
இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் இந்த அதிரடியான முடிவை எடுத்துள்ளது சிஎஸ்கே அணி.
2022 ஐபிஎல் போட்டிக்கு முன்பு இதேபோல சிஎஸ்கே அணியின் கேப்டனாக ஜடேஜா செயல்படுவார் என அறிவிக்கபட்ட நிலையில், அந்த பருவத்தின் பாதியிலேயே தனது பதவியிலிருந்து விலகினார் ஜடேஜா.
இந்நிலையில் இந்த ஆண்டு சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெயிக்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் போட்டிக்கான அறிமுக நிகழ்ச்சியில் சிஎஸ்கே அணி சார்பாக கெயிக்வாட் இடம்பெற்றுள்ளார்.
2010, 2011, 2018, 2021, 2023 ஆகிய ஐந்து ஆண்டுகளில் சிஎஸ்கே அணிக்காக கோப்பையைப் பெற்று தந்தவர் தோனி.
ஏற்கெனவே இது தோனியின் கடைசி ஐபிஎல் போட்டியாக இருக்குமா? என ரசிகர்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது. இந்நிலையில் இம்முடிவும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.