இலங்கை அணியின் முன்னாள் யு-19 கேப்டன் படுகொலை!

இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாராணை மேற்கொண்டு வருகின்றனர்.
நிரோஷனா
நிரோஷனா
1 min read

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் யு-19 கேப்டன் தமிகா நிரோஷனா அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

2000, 2002-ல் இலங்கை யு-19 அணியில் விளையாடிவர் நிரோஷனா. 2002-ல் கேப்டனாக செயல்பட்ட இவரது தலைமையில் ஏஞ்சலோ மேத்யூஸ், தரங்கா ஆகியோர் விளையாடினர்.

12 முதல்தர ஆட்டங்கள் மற்றும் 8 லிஸ்ட் ஏ ஆட்டங்களில் பங்கேற்ற இவருக்கு சர்வதேச அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இவர் இலங்கையில் உள்ள தனது வீட்டில் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நிரோஷனா அவரது வீட்டுக்கு அருகே அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து வேறெந்த தகவலும் இதுவரை தெரியாத நிலையில், காவல் துறையினர் விசாராணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in