சிஎஸ்கே ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி அளித்த தோனி

சொந்த மண்ணில் தோனியின் ஆட்டத்தை பார்க்க வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர்.
தோனி
தோனிANI

சிஎஸ்கே ரசிகர்களுக்கு தோனி இன்பதிர்ச்சி அளித்த காட்சி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

நடப்பு ஐபிஎல் பருவத்தில் நேற்று நடைபெற்ற கேகேஆர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே தோனி களமிறங்கினார். இந்த ஆட்டத்திற்கு முன்னதாக சிஎஸ்கே அணி விளையாடிய இரண்டு ஆட்டங்களிலும் தோனி பேட்டிங் செய்தார். ஆனால் அவை சென்னையில் நடைபெறவில்லை.

எனவே சொந்த மண்ணில் தோனியின் ஆட்டத்தை பார்க்க வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர். அதற்கேற்ப சூழலும் நேற்று அமைந்தது. வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் துபே வெளியேற அடுத்ததாக ஜடேஜா களமிறங்க வந்தார்.

ஆனால் திடீரென திரும்பி, வந்த பாதையில் சென்றார். அப்போது தான் கதாநாயகனின் அறிமுகம். ரசிகர்களின் ஆரவாரமான சத்தத்தில் தோனி உள்ளே வந்தார். சொந்த மண்ணில் ரசிகர்கள் அவரை கொண்டாடினர். சத்தம் தாங்க முடியாமல் எதிரணி வீரர் ரஸ்ஸல் காதுகளை மூடிக்கொண்டார். தோனி ஒரே ஒரு ரன்னை மட்டும் இந்த ஆட்டத்தில் எடுத்தார்.

இந்நிலையில் தோனிக்கு முன்பு ஜடேஜா களமிறங்குவது போல், சிஎஸ்கே ரசிகர்களை பிராங்க் செய்த காட்சி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

ஆனால் ஆட்டம் முடிந்த பின்பு, மற்றொரு உண்மை தெரியவந்துள்ளது. இந்த பிராங்கை தோனி, ஜடேஜா ஆகிய இருவரும் சேர்ந்துதான் செய்திருக்கிறார்கள்.

இது குறித்து சிஎஸ்கே வீரரான தேஷ்பாண்டே, “நீ பேட்டிங் செய்ய உள்ளே செல்வதுபோல நடி, பின்பு நான் களமிறங்குகிறேன் என ஜடேஜாவிடம் தோனி சொன்னதை நான் கேட்டேன்” என பேசியுள்ளார்.

மேலும், “ரசிகர்கள் தோனி பேட்டிங்கைப் பார்த்ததால், தாங்கள் செலவழித்த பணத்தின் மதிப்பை உணர்ந்திருப்பார்கள்” என ஜடேஜா கூறியுள்ளார்.

இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in