இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டுள்ளது.
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 டெஸ்டுகளில் விளையாடுகிறது.
இந்நிலையில் பெங்களூருவில் இன்று நடைபெறவிருந்த முதல் டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் மழையால் டாஸ் கூட போடப்படாத நிலையில் கைவிடப்பட்டுள்ளது.
அடுத்த 4 நாட்களுக்கும் பெங்களூருவில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த ஆட்டம் முழுமையாக நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
2-வது நாள் ஆட்டம் 15 நிமிடங்களுக்கு முன்பாகவே தொடங்கப்படும் என்றும், மொத்தமாக 98 ஓவர்கள் வீசப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.