செஸ் ஒலிம்பியாட் போட்டியில் முதல்முறையாக தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது இந்திய ஆடவர் அணி.
ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 193 அணிகள் பங்கேற்ற ஓபன் பிரிவில் இந்திய ஆடவர் அணி தங்கம் வென்றுள்ளது.
முதல் 8 சுற்றுகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, 9-வது சுற்றில் டிரா செய்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற 10-வது சுற்றில் அமெரிக்காவின் ஃபேபியானோவை இந்திய வீரர் குகேஷ் வீழ்த்தினார்.
இதைத் தொடர்ந்து 10-வது சுற்றின் முடிவில் இந்திய அணி புள்ளிகள் பட்டியலில் 17 புள்ளிகளுடன் முன்னிலை வகித்தது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற கடைசி சுற்றில் இந்திய வீரர்களான குகேஷ் மற்றும் அர்ஜுன் ஆகிய இருவரும் ஸ்லோவேனியா அணிக்கு எதிராக வெற்றி பெற்றனர்.
இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து செஸ் ஒலிம்பியாட் போட்டியில் முதல்முறையாக தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது இந்திய ஆடவர் அணி.
2022-ல் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் வெண்கலப் பதக்கத்தை வென்றன.