
சிஎஸ்கே பந்துவீச்சாளர் குர்ஜப்நீத் சிங் காயம் காரணமாக ஐபிஎல் 2025 போட்டியிலிருந்து விலகியுள்ளார். இதையடுத்து தென்னாப்பிரிக்க அதிரடி பேட்டர் டியவால்ட் பிரேவிஸை சிஎஸ்கே அணி தேர்வு செய்துள்ளது.
கடந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் பிரேவிஸை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை. 21 வயது பிரேவிஸ், தென்னாப்பிரிக்க அணிக்காக 2 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.
ஐபிஎல்-லில் 2022, 2024 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸுக்காக இவர் விளையாடினார். மொத்தமாக இதுவரை விளையாடிய 81 டி20 ஆட்டங்களில் 123 சிக்ஸர்களுடன் 144.93 ஸ்டிரைக் ரேட் வைத்துள்ளார். அதிரடி ஆட்டத்துக்குப் பெயர் பெற்றவர் என்பதால் சிஎஸ்கே அணி பிரேவிஸைத் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் 2025 போட்டியில் சிஎஸ்கே அணி இதுவரை விளையாடிய 7 ஆட்டங்களில் 2-ல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.