டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் வெற்றிப் பேரணி!

முன்னதாக, இந்திய அணி வீரர்கள் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்திக்கவுள்ளனர்.
டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் வெற்றிப் பேரணி!
டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் வெற்றிப் பேரணி!@bcci
1 min read

டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி வெற்றிப் பேரணியை மேற்கொள்ள உள்ளதாக பிசிசிஐ செயலர் ஜெய் ஷா அறிவித்துள்ளார்.

புயலின் அபாயம் காரணமாக நாடு திரும்புவதில் தாமதமான நிலையில், இந்திய அணி இன்று மே.இ. தீவுகளில் இருந்து புறப்பட்டது.

தனி விமானம் மூலம் இன்று புறப்பட்ட இந்திய அணி நாளை அதிகாலை தில்லி வரவுள்ளது.

இந்திய அணி நாடு திரும்பியவுடன் அவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என ஜெய் ஷா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நாளை (ஜூலை 4) மாலை 5 மணி முதல் மும்பையின் மரைன் டிரைவ் மற்றும் வான்கடேவில் வெற்றிப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்திய அணி வீரர்கள் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்திக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in