
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட், 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் சென்னையில் தொடங்கியுள்ளது.
டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். ஆடுகளத்தில் ஈரப்பதம் இருப்பதால், சூழலைப் பயன்படுத்திக்கொள்ள விரும்புவதாக ஷாண்டோ தெரிவித்தார். மேலும், முதல் செஷன் வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமாக இருக்கும் என்றும் அவர் கணித்துள்ளார். 3 வேகப்பந்துவீச்சாளர்கள், 2 சுழற்பந்துவீச்சாளர்களுடன் வங்கதேசம் களமிறங்குகிறது.
இந்தியாவும் பந்துவீச்சையே தேர்வு செய்ய விரும்பியதாக ரோஹித் சர்மா தெரிவித்தார். இந்திய அணியும் 3 வேகப்பந்துவீச்சாளர்கள், 2 சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்குவதாக ரோஹித் சர்மா அறிவித்துள்ளார்.
இந்திய அணி
ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெயிஸ்வால், ஷுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முஹமது சிராஜ், ஆகாஷ் தீப்.
வங்கதேச அணி
ஷாட்மன் இஸ்லாம், ஸாகிர் ஹசன், நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ (கேப்டன்), மோமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹீம், ஷகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ் (விக்கெட் கீப்பர்), மெஹிதி ஹசன் மிராஸ், டஸ்கின் அஹமது, ஹசன் மஹ்மூத், நஹித் ராணா.