
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் பாட்மிண்டன் காலிறுதியில் சாத்விக் - சிராக் இணை தோல்வி அடைந்துள்ளது.
பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டி ஜூலை 26 அன்று கோலாகலமாகத் தொடங்கியது.
இப்போட்டி ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது. இதில் 203 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் 6-வது நாளான இன்று பாட்மிண்டன் காலிறுதி ஆட்டம் நடைபெற்றது.
இதில் விளையாடிய சாத்விக் - சிராக் இணை 21-13, 14-21, 21-16 என்கிற கேம் கணக்கில் தோல்வி அடைந்துள்ளது.
முதல் கேமை இந்திய வீரர்கள் எளிதில் வென்றாலும், அடுத்த இரண்டு கேம்களும் மிகவும் விறுவிறுப்பாகச் சென்றது. இறுதியில் சாத்விக் - சிராக் இணை தோல்வி அடைந்து வெளியேறியது.