40-க்கு 40 என்பதே இலக்கு: முதல்வர் மு.க. ஸ்டாலின்

40 தொகுதிகளிலும், நானே போட்டியிடுகிறேன் என்பதை மனதில் வைத்து அனைவரும் பணியாற்ற வேண்டும்.
மு.க. ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின்ANI

மாநிலங்களை மதிக்கும் ஒன்றிய அரசை அமைக்க திமுக தலைமையிலான கூட்டணி 40-க்கு 40-ம் வென்றாக வேண்டும் எனக் கூறி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில், திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு உறுதியானது. இந்நிலையில் 40-க்கு 40-ம் வென்றாக வேண்டும் என திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து மு.க. ஸ்டாலின் கூறியதாவது:

“புதுச்சேரி உட்பட தமிழ்நாட்டின் 40 தொகுதிகளிலும், நானே போட்டியிடுகிறேன் என்பதை மனதில் வைத்து அனைவரும் பணியாற்ற வேண்டும்.

மாநிலங்களை மதிக்கும் ஒன்றிய அரசை அமைக்க திமுக தலைமையிலான கூட்டணி நாற்பதுக்கு நாற்பது வென்றாக வேண்டும். வெற்றி ஒன்றே உங்களின் நோக்கமாக இருக்கட்டும்.

பத்தாண்டுக் கால பாஜக ஆட்சி இந்தியாவைப் பாழ்படுத்தியதை, மூன்றாண்டுக் கால திராவிட மாடல் ஆட்சியால் தமிழ்நாடு அடைந்துள்ள ஏற்றத்தை மக்களுக்கு நினைவூட்டுங்கள். நாற்பதும் நமதே, நாடும் நமதே” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in