ஐபிஎல் 2025-க்கு முன்பு மெகா ஏலம்

இந்தியா மற்றும் பிற நாடுகளிலிருந்து ஏற்கெனவே புதிய திறமைகளை அறிமுகப்படுத்தியது போல, இந்த மெகா ஏலத்தில் இன்னும் பல திறமையாளர்கள் கண்டறியப்படுவார்கள்.
ஐபிஎல் 2025-க்கு முன்பு மெகா ஏலம்
ANI
1 min read

ஐபிஎல் 2025-க்கு முன்பு மெகா ஏலம் நடைபெறும் என ஐபிஎல் தலைவர் அருண் துமால் அறிவித்துள்ளார்.

ஐபிஎல் 2024 மார்ச் 22 அன்று தொடங்குகிறது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளன. இந்நிலையில் ஐபிஎல் 2025-க்கு முன்பு மெகா ஏலம் நடைபெறும் என ஐபிஎல் தலைவர் அருண் துமால் அறிவித்துள்ளார்.

இது குறித்து அருண் துமால் ஸ்போர்ட்ஸ் ஸ்டார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் பேசியதாவது:

“அடுத்த வருட ஐபிஎல் போட்டிக்கு மெகா ஏலம் கண்டிப்பாக நடைபெறும். ஏலத்திற்கு முன்பு ஒவ்வொரு அணியும் 3-4 வீரர்களைத் தக்க வைக்கலாம். இதன் மூலம் புதிய அணிகள் உருவாக்கப்படும். இது இன்னும் ஐபிஎல் போட்டிகளை சுவாரசியமாக்கும். இந்தியா மற்றும் பிற நாடுகளிலிருந்து ஏற்கெனவே புதிய திறமைகளை அறிமுகப்படுத்தியது போல, இந்த மெகா ஏலத்தில் இன்னும் பல திறமையாளர்கள் கண்டறியப்படுவார்கள். ஐபிஎல் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் போன்ற அணிகளும் தங்கள் திறமையை வெளிப்படுத்தி பலனடைந்துள்ளது” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in