ஜன. 10 அன்று 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் | Rain Alert |

தமிழ்நாட்டின் வடகடலோர மாவட்டங்களுக்கும் மழை உண்டு என்று சுயாதீன வானிலை ஆய்வாளர் தகவல்...
ஜன. 10 அன்று 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
ஜன. 10 அன்று 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
1 min read

தமிழ்நாட்டில் ஜனவரி 10 அன்று 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இன்று திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

4 மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை

இந்நிலையில், நாளை (ஜன. 10) கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மிகக் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 11 அன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்

இதற்கிடையில், தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை (ஜன. 10) இலங்கை கடற்கரையோரம் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான பதிவில், “இன்று காலை 5 மணிக்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இலங்கையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கையின் வடக்குக் கடற்கரை ஓரம் நாளை (ஜன. 10) கரையைக் கடக்கும்” என்று கூறியுள்ளது.

கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இதற்கிடையில் சுயாதீன வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:-

“தற்போது காரைக்காலுக்கு 530 கி.மீட்டர் தொலைவிலும், நாகைக்கு 530 கி.மீட்டர் தொலைவிலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளதாலும் வடகிழக்கு பருவமழை முடியாத காரணத்தாலும் ஜனவரி 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் டெல்டா மாவட்டங்களான நாகை, திருவாரூர், காரைக்கால், மயிலாடுதுறை மற்றும் கடலூரில் மிகக் கனமழைக்கும், வட கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்படு, காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

Summary

The Meteorological Department has issued an orange alert for very heavy rain in 4 districts of Tamil Nadu on January 10.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in