சிங்கமுத்துவுக்கு எதிராக வடிவேலு வழக்கு: பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

தன்னைப்பற்றி தரக்குறைவாகப் பேசியதாகக் கூறி...
வடிவேலு
வடிவேலு
1 min read

ரூ. 5 கோடி மான நஷ்டஈடு கோரி நடிகர் சிங்கமுத்துவுக்கு எதிராக வடிவேலு தொடர்ந்த வழக்கில், சிங்கமுத்து பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வடிவேலும் சிங்கமுத்துவும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இதைத் தொடர்ந்து சில கருத்து வேறுபாடு காரணமாக ஒரு கட்டத்திற்கு பிறகு இருவரும் இணைந்து நடிக்கவில்லை.

இந்நிலையில் சிங்கமுத்து, யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தன்னைப்பற்றி தரக்குறைவாகப் பேசியதாகக் கூறி ரூ. 5 கோடி மானநஷ்ட ஈடு கேட்டு வடிவேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் சிங்கமுத்து 2 வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என்று கூறி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in