
தனிப்பட்ட முறையில் அம்பானி குடும்பத்தினரைத் தெரியாதக் காரணத்தால், அவர்கள் வீட்டுத் திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை என்று தாப்ஸி பேசியுள்ளார்.
இந்தியாவின் பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானிக்கும், என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விரென் மெர்சண்ட்டின் மகள் ராதிகா மெர்சண்டுக்கும் ஜூலை 12 அன்று திருமணம் நடைபெற்றது.
இதில் திரைப் பிரபலங்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் பிரபல நடிகை தாப்ஸி அம்பானி வீட்டுத் திருமணத்தில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று முன்பு நேர்காணல் ஒன்றில் தெரிவித்தார். இது தொடர்பான காணொளி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
தாப்ஸி பேசியதாவது: “எனக்கு அவர்களைத் தனிப்பட்ட முறையில் தெரியாது. திருமணத்தை தனிப்பட்ட நிகழ்வாக நான் பார்க்கிறேன். குடும்பத்தினர்ருக்கும், விருந்தினருக்கும் சிறிதளவு பழக்கம் இருந்தால் மட்டுமே பெரும்பாலும் நான் திருமணத்தில் கலந்துகொள்வேன்” என்றார்.