.png?w=480&auto=format%2Ccompress&fit=max)
சமீபத்தில் பிறந்த ஆண் குழந்தைக்கு பவன் என்று பெயர் சூட்டியுள்ளார் சிவகார்த்திகேயன்.
சிவகார்த்திகேயன் - ஆர்த்தி ஜோடிக்கு கடந்த 2010-ல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஆராதனா என்ற மகளும், குகன் என்ற மகனும் உள்ள நிலையில் 3-வது குழந்தை கடந்த ஜூன் 2 அன்று பிறந்தது.
இந்நிலையில் அந்த குழந்தைக்கு பவன் என்று பெயர் சூட்டியுள்ளார் சிவகார்த்திகேயன். இது தொடர்பான காணொளியை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.