3-வது குழந்தைக்கு பெயர் சூட்டிய சிவகார்த்திகேயன்

கடந்த ஜூன் 2 அன்று சிவகார்த்திகேயன் - ஆர்த்தி ஜோடிக்கு 3-வது குழந்தை பிறந்தது.
சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்@Siva_Kartikeyan
1 min read

சமீபத்தில் பிறந்த ஆண் குழந்தைக்கு பவன் என்று பெயர் சூட்டியுள்ளார் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயன் - ஆர்த்தி ஜோடிக்கு கடந்த 2010-ல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஆராதனா என்ற மகளும், குகன் என்ற மகனும் உள்ள நிலையில் 3-வது குழந்தை கடந்த ஜூன் 2 அன்று பிறந்தது.

இந்நிலையில் அந்த குழந்தைக்கு பவன் என்று பெயர் சூட்டியுள்ளார் சிவகார்த்திகேயன். இது தொடர்பான காணொளியை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in