கங்குவா படத்தை வெளியிடத் தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு உள்பட பலர் நடித்திருக்கும் ‘கங்குவா’ படம் நவம்பர் 14 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில் இப்படத்தை வெளியிடத் தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம், பல படங்களின் தயாரிப்புக்காக வாங்கிய ரூ. 99.22 கோடியில் மீதமுள்ள ரூ. 55 கோடியை திரும்ப வழங்காததால், கங்குவா படம் வெளியிட தடை விதிக்க வேண்டும் என ரிலையன்ஸ் நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.
இந்த வழக்கின் விசாரணையில் ஸ்டுடியோ கிரீன் தரப்பில் பாக்கித் தொகை இன்று (நவ.8) வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய பாக்கித் தொகையை முழுமையாக ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் செலுத்தியதைத் தொடர்ந்து, கங்குவா படத்தை வெளியிடத் தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.