பாலியல் வன்கொடுமை வழக்கு: நடிகர் சித்திக்கின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

தன் மீது பொய் குற்றச்சாட்டு வைத்ததாகக் கூறி கேரள டிஜிபியிடம் சித்திக் மனு அளித்திருந்தார்.
சித்திக்
சித்திக்
1 min read

நடிகர் சித்திக் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அவரின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மலையாள நடிகைகளுக்கு பாலியல் ரீதியான நெருக்கடிகள் உள்ளதாக நீதிபதி ஹேமா ஆணையம் பரபரப்பு அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து மலையாள கலைஞர்கள் மீது அடுத்தடுத்து வைக்கப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

முன்னதாக, மலையாள திரைப்பட நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராக இருந்த சித்திக் மீது பாலியல் வன்கொடுமை புகார் எழுந்த நிலையில், சங்கத்தின் பொதுச்செயலாளர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

சித்திக் மீது பாலியல் புகார் தெரிவித்த நடிகை ரேவதி சம்பத், கடந்த 2016-ல் மஸ்கட் விடுதியில் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் குறிப்பிட்டு, சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் புகார் அளித்தார்.

இந்நிலையில் திருவனந்தபுரம் காவல் துறையினர் சித்திக் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதன் பிறகு தன் மீது ரேவதி சம்பத் பொய் குற்றச்சாட்டு வைத்ததாகக் கூறி கேரள டிஜிபியிடம் சித்திக் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் தனக்கு ஜாமின் வழங்கக் கோரி சித்திக் தொடர்ந்த மனுவை கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in