ஜெயமோகனின் மஞ்ஞும்மல் பாய்ஸ் விமர்சனம்: பாக்யராஜ் எதிர்ப்பு

கேரளாவில் வசிப்பவர்களைத் தனிப்பட்ட முறையில் தாக்கியது போல இருந்தது.
பாக்யராஜ்
பாக்யராஜ்

மஞ்ஞும்மல் பாய்ஸ் படம் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் விமர்சித்ததற்கு, இயக்குநர் மற்றும் நடிகருமான பாக்யராஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள மலையாளப் படம் - மஞ்ஞும்மல் பாய்ஸ். இப்படத்தைத் தனது வலைத்தளத்தில் கடுமையாக விமர்சித்திருந்தார் பிரபல தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன்.

ஜெயமோகன் கூறியதாவது:

“மஞ்ஞும்மல் பாய்ஸ் எனக்கு எரிச்சலூட்டும் படமாக இருந்தது. பொறுக்கிகளை எளியவர்களின் கொண்டாட்டம் என்று காட்டி நியாயப்படுத்துவது மட்டுமல்ல, அவர்களை உன்னதமாக்குகிறது மஞ்ஞும்மல் பாய்ஸ். அவர்களை தியாகிகள், நட்பின் இலக்கணங்கள் என்று சொல்ல முயல்கிறது. இவர்கள் எடுக்கும் போதைவெறி சினிமாக்களை தமிழகத்தில் கொண்டாடுபவர்கள் அசடுகள் அல்லது அயோக்கியர்கள் என்றே வகைப்படுத்துவேன்” என்றார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழ்த் திரையுலகின் இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் சமீபத்தில் நடந்த “கா” படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

“மஞ்ஞும்மல் பாய்ஸ் படம் தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால் அந்த படம் குறித்து ஒரு பிரபல எழுத்தாளர் எழுதியது எனக்கு மிகவும் வேதனையாக உள்ளது. அவர் படத்தைப் பற்றி விமர்சனம் செய்ததோடு கேரள மக்களைக் குறித்தும் தவறாகப் பேசியுள்ளார். இது தமிழ்நாட்டின் கலாசாரமே கிடையாது. பண்பாடும் அல்ல. நமக்கு அனைவரையும் பாராட்டிதான் பழக்கம்.

அவர் எழுதியது அந்த ஊரில் வசிப்பவர்களைத் தனிப்பட்ட முறையில் தாக்கியது போல இருந்தது. ஒருவர் இப்படி விமர்சனம் செய்தும் தமிழ்நாட்டில் இதனை யாரும் கண்டுகொள்ளவில்லை என கேரள மக்கள் நினைத்துவிடக் கூடாது என்பதால் தமிழ்நாட்டின் சார்பாகப் பேசுகிறேன்” என்றார்.

ஜெயமோகனின் கேரளமும் குடியும்- கடிதம்

https://www.jeyamohan.in/197925/

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in