அமீர் விவகாரம்: சூர்யாவால் வெளியிட முடியாமல் போன கடிதம்

“விஜயகாந்த் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததால் பதிலளிக்க வேண்டாம் என்றார்”.
அமீர் விவகாரம்: சூர்யாவால் வெளியிட முடியாமல் போன கடிதம்
அமீர் விவகாரம்: சூர்யாவால் வெளியிட முடியாமல் போன கடிதம்
1 min read

பருத்திவீரன் படம் விவகாரம் குறித்து நடிகர் சூர்யா பேசாமல் இருந்ததற்கான காரணத்தை இயக்குநர் பாண்டிராஜ் பகிர்ந்துள்ளார்.

இயக்குநர் அமீர் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் 2007-ல் வெளியான படம் பருத்திவீரன். இப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குனர் அமீர் இடையே சில பிரச்னைகள் எழுந்தது. படத்தை எடுத்து முடிக்க அமீர் தாமதித்ததாகவும், அவர் தவறாக கணக்கு காட்டியதாகவும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியிருந்தார்.

மேலும், இப்படத்தை ஆரம்பத்தில் சூர்யா தயாரிப்பதாகக் கூறி அதன் பிறகு அதிலிருந்து விலகியதாகவும் தகவல்கள் வெளியானது. இதைத் தொடர்ந்து இது தொடர்பாக ஏன் சூர்யா பேசவில்லை என பலரும் கேள்வி எழுப்பினர். இந்நிலையில் இதற்கு விளக்கம் அளித்துள்ளார் இயக்குநர் பாண்டிராஜ்.

சமீபத்தில் எஸ்எஸ் மியூசிக் சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் பேசியதாவது, “பருத்திவீரன் படம் விவகாரம் குறித்து நடிகர் சூர்யாவை பலரும் விமர்சித்தனர். அப்போது இதற்கு ஏன் விளக்கம் அளிக்காமல் இருக்கிறீர்கள்? என அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், “நாம் பெரிய மரியாதையை வைத்திருக்கோமே சார். அதை கெடுத்துவிடக்கூடாது” என்றார். அந்த கஷ்டமான சூழலில் அவரிடம் பேசியதற்காக நன்றி தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து பருத்திவீரன் படம் விவகாரம் குறித்து பதிலளிக்க முடிவு செய்தோம். ஆனால், அப்போது விஜயகாந்த் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனவே, இந்த தருணத்தில் பதிலளிக்க வேண்டாம் என்றார். இதைத் தொடர்ந்து மழை போன்ற பல்வேறு காரணங்களால் அதற்கான பதிலை அளிக்க முடியவில்லை. அந்த கடிதம் வெளியாகியிருந்தால் சூர்யா தரப்பில் இருக்கக்கூடிய நியாயம் தெரியவந்திருக்கும்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in