.png?w=480&auto=format%2Ccompress&fit=max)
தலைக்கவசம் அணியாமல் வண்டி ஓட்டியக் காரணத்தால் நடிகர் பிரசாந்துக்கு ரூ. 2000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பிரசாந்த் நடித்திருக்கும் அந்தகன் படம் ஆகஸ்ட் 9 அன்று வெளியாக உள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் புரமோஷன் தொடர்பாக நேர்காணல் ஒன்றில் பேசிய பிரசாந்த், கொஞ்சம் வித்தியாசமான முறையில் புல்லட் வாகனத்தை ஓட்டியபடி பேட்டி அளித்தார். ஆனால், தலைக்கவசம் அணியாமல் பேசியிருந்தார். கேள்வி கேட்டவரும் தலைக்கவசம் அணியவில்லை.
இதைத் தொடர்ந்து பிரசாந்த் விதியை மீறியதாகக் கூறி பலரும் விமர்சித்தனர். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிலர் கருத்து தெரிவித்த நிலையில், சென்னை போக்குவரத்து காவல்துறை தலைக்கவசம் அணியாமல் சென்ற பிரசாந்துக்கு ரூ. 2000 அபராதம் விதித்துள்ளது.