ரிலையன்ஸ் நிறுவனத்தின் முழுநேர இயக்குநராக அனந்த் அம்பானி நியமனம்!

அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பை நிறைவுசெய்த ஆனந்த் அம்பானி, விலங்குகள் நலனில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் முழுநேர இயக்குநராக அனந்த் அம்பானி நியமனம்!
ANI
1 min read

ரிலையன்ஸ் நிறுவனத்தின் முழு நேர இயக்குநராக அந்நிறுவனத்தின் தலைவரும், மேலாண் இயக்குநருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி நியமிக்கப்பட்டுள்ளார்.

மே 1, 2025 தொடங்கி அடுத்த ஐந்து ஆண்டு காலத்திற்கு ஆனந்த் அம்பானியை ரிலையன்ஸ் நிறுவனத்தின் முழு நேர இயக்குநராக்கும் நியமனத்திற்கு, இயக்குநர்கள் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. நிறுவனத்தின், மனிதவளம், நியமனம் மற்றும் ஊதியங்கள் குழுவின் பரிந்துரையின்பேரில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தற்போது ரிலையன்ஸ் நிறுவனத்தின் அலுவல் சாரா இயக்குநராக உள்ள ஆனந்த அம்பானி, இதன் மூலம் நிறுவனத்தின் முக்கியப் பதவியில் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

மார்ச் 2020 முதல் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ், மே 2022 முதல் ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ், ஜூன் 2021 முதல் ரிலையன்ஸ் நியூ எனர்ஜி மற்றும் ரிலையன்ஸ் நியூ சோலார் எனர்ஜி எனப் பல்வேறு ரிலையன்ஸ் குழும நிறுவனங்களின் இயக்குநர்கள் குழுவில் அவர் பணியாற்றுகிறார். குறிப்பாக, செப்டம்பர் 2022-ல் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் உறுப்பினர் பொறுப்பிலும் அவர் நியமிக்கப்பட்டார்.

அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பை நிறைவுசெய்த ஆனந்த் அம்பானி, விலங்குகள் நலனில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

ஆபத்தான கட்டத்தில் உள்ள விலங்குகளுக்கு மறுவாழ்வு வழங்கும் நடவடிக்கைகளுக்காக குஜராத் மாநிலம் ஜாம்நகரில், 3,000 ஏக்கர் பரப்பளவில் `வன்தாரா’ என்ற பெயரில் வன உயிரினங்களுக்கான பிரத்யேக மறுவாழ்வு மையத்தை அவர் நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in