24 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் காஸாவில் படுகொலை

அக்டோபரில் போர் தொடங்கியதிலிருந்து ஒரே நாளில் கொல்லப்பட்ட இஸ்ரேல் வீரர்களின் அதிகபட்ச எண்ணிக்கை இது
இஸ்ரேல் ராணுவத்தினுடைய செய்தித் தொடர்பாளர்
இஸ்ரேல் ராணுவத்தினுடைய செய்தித் தொடர்பாளர்படம்:https://www.idf.il/en/mini-sites/hamas-israel-war-24/briefings-by-idf-spokesperson-rear-admiral-daniel-hagari/

காஸாவில் 24 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது.

அக்டோபரில் போர் தொடங்கியதிலிருந்து ஒரே நாளில் கொல்லப்பட்ட இஸ்ரேல் வீரர்களின் அதிகபட்ச எண்ணிக்கை இது என இஸ்ரேல் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரேல் ராணுவத்தினுடைய செய்தித் தொடர்பாளர், காஸாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 21 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், "ராணுவ வாகனம் மீது தாக்குதல் நடத்திய அதே நேரத்தில், இரு கட்டடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. படைகளை அழிப்பதற்காக ஏற்கெனவே கட்டடங்களில் வெடிகுண்டு பொறுத்தப்பட்டிருந்தன. கட்டடங்கள் நாசமடைந்து ராணுவப் படைகள் மீது சரிந்தது. நிகழ்வு குறித்தும், குண்டுவெடிப்புக்கான காரணம் குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம்" என்றார்.

முன்னதாக தெற்கு காஸாவில் நிகழ்ந்த மற்றொரு தாக்குதலில் 3 வீரர்கள் கொல்லப்பட்டதாக அந்த நாட்டு ராணுவம் தெரிவித்தது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in