அதிமுகவைச் சேர்ந்த பொன்னேரி சட்டப்பேரவையின் முன்னாள் உறுப்பினர் ரவிக்குமார் கார் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
அதிமுக முன்னாள் எம்எல்ஏ ரவிக்குமார் சென்னையில் மருத்துவப் படிப்பு படிக்கும் தனது மகளைக் கல்லூரியில் இறக்கிவிட்டு காரில் வீடு திரும்பியுள்ளார்.
மீஞ்சூர், வண்டலூர் வெளிவட்டச் சாலையில் மனைவியுடன் சென்றுகொண்டிருந்தபோது, முன்னே சென்றுகொண்டிருந்த லாரி மீது ரவிக்குமாரின் கார் மோதியுள்ளது. இதில் ரவிக்குமார் மற்றும் மனைவி நிர்மலா ஆகியோர் பலத்த காயமடைந்தார்கள்.
இருவரும் மீஞ்சூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். இதில் ரவிக்குமார் உயிர் ஏற்கெனவே பிரிந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மனைவி நிர்மலா மட்டும் மேல்சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
இவர் 1991-96-ல் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியின்போது பொன்னேரி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரது மனைவி நிர்மலாவும் அதிமுக முன்னாள் எம்எல்ஏ. இவரும் 1991-96 காலகட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார்.