கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியா?: அண்ணாமலை பதில்

"இருக்கிற வேலைகளைச் செய்ய முடியாமல் திணறி வருகிறோம்."
அண்ணாமலை (கோப்புப்படம்)
அண்ணாமலை (கோப்புப்படம்)ANI
1 min read

தேர்தலில் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு, கட்சிப் பணியை செய்வதற்கே நேரம் போதவில்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை சென்றுள்ள அண்ணாமலை இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.

"இருக்கிற வேலைகளைச் செய்ய முடியாமல் திணறி வருகிறோம். அனைத்து இடங்களுக்குச் செல்ல வேண்டும், பிரசாரம் மேற்கொள்ள வேண்டும், கட்சியைத் தயார் செய்ய வேண்டும் என்பதுதான் கட்சி எனக்குக் கொடுத்துள்ள பணி. அதை நான் செய்து வருகிறேன்.

அதே நேரத்தில் கோவையில் உழைப்பைப் போட்டு, சேவை செய்ய நிறைய தலைவர்கள் காத்திருக்கிறார்கள். எனவே, நல்ல வேட்பாளர்களை நாங்கள் அறிவிப்போம். மக்கள் நல்ல வேட்பாளர்களுக்கும், மோடிக்கும் ஆதரவைக் கொடுப்பார்கள். ஒரு சேவகனாக பின்னாடி இருந்து வேலை செய்ய நான் எப்போதும் தயாராக இருப்பேன். இதன்பிறகு, கட்சியின் முடிவுதான்" என்று அண்ணாமலை பதிலளித்தார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in