புதுச்சேரி தலைமைச் செயலாளர் மாற்றம்!

புதுச்சேரியின் புதிய தலைமைச் செயலாளராக சரத் சௌஹான் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரி தலைமைச் செயலாளர் மாற்றம்!
ANI

புதுச்சேரி தலைமைச் செயலாளராக இருந்த ராஜீவ் வர்மா சண்டிகருக்கு மாற்றப்பட்டுள்ளார்.

புதுச்சேரியின் புதிய தலைமைச் செயலாளராக சரத் சௌஹான் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏஜிஎம்யூடி (அருணாச்சலப் பிரதேசம், கோவா, மிசோரம் மற்றும் இதர யூனியன் பிரதேசங்கள்) பிரிவின் மூன்று மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். கடந்த 2022 மே முதல் புதுச்சேரி தலைமைச் செயலாளராக இருந்து வந்த ராஜீவ் வர்மா சண்டிகரில் நிர்வாக ஆலோசகராக மாற்றப்பட்டுள்ளார்.

மற்ற மாநிலங்களில் தலைமைச் செயலாளருக்கு நிகரான இந்தப் பதவி கடந்தாண்டு அக்டோபரில் தரம்பால் ஓய்வு பெற்றதிலிருந்து காலியாக இருந்தது. இந்தப் பொறுப்புக்குத் தற்போது ராஜீவ் வர்மா மாற்றப்பட்டுள்ளார்.

அருணாச்சலப் பிரதேசத்தில் நிதி, திட்டம் மற்றும் முதலீடுகளுக்கான முதன்மைச் செயலாளராக இருந்த சரத் சௌஹான் புதுச்சேரி தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மிசோரமில் பொது நிர்வாகத் துறையின் முதன்மைச் செயலாளராக இருந்த நவீன் குமார் சௌதரி தில்லிக்குப் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in