நாம் தமிழர் ஆட்சியில் சிஎஸ்கேவில் 11 பேரும் தமிழர்கள்: சீமான்

"சிஎஸ்கேவில் விளையாடும் 11 பேரும் தமிழர்களாக இருப்பார்கள். நானும் வந்து விளையாடுவேன்."
நாம் தமிழர் ஆட்சியில் சிஎஸ்கேவில் 11 பேரும் தமிழர்கள்: சீமான்

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் சென்னை சூப்பர் கிங்ஸில் 11 பேரும் தமிழர்களாக இருப்பார்கள் என அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

மறைந்த முத்துக்குமார் நினைவாக நாம் தமிழர் கட்சியின் சார்பில் 15-வது ஆண்டு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய கட்சியினுடைய தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் என்னென்ன மாற்றங்கள் கொண்டு வரப்படும் எனப் பட்டியலிட்டார்.

அப்போது, "ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒரு தமிழர் கூட இடம்பெறவில்லை எனக் கவலை வேண்டாம். நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் சிஎஸ்கேவில் விளையாடும் 11 பேரும் தமிழர்களாக இருப்பார்கள். நானும் வந்து விளையாடுவேன்" என்றார்.

சீமானின் இந்தப் பேச்சு சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in