மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மாநிலங்கள் வாரியாக பாஜக தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்துள்ளது.
மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் மேற்கொள்ளத் தொடங்கிவிட்டன. காங்கிரஸ் கட்சி இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கிவிட்டது.
தேர்தலுக்கான பிரசாரத்தை ஏற்கெனவே தொடங்கிய பாஜக தற்போது மாநிலங்கள் வாரியாக தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் இணை பொறுப்பாளர்களை நியமித்துள்ளது. தமிழ்நாட்டின் தேர்தல் பொறுப்பாளராக அரவிந்த் மேனன் நியமிக்கப்பட்டுள்ளார். சுதாகர் ரெட்டி இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரிக்கு நிர்மல் குமார் சுரானா தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.