தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.
தருமபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் இரட்டைப் பாலம் அருகே நேற்று மாலை 3 லாரிகள் மற்றும் 2 கார்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்டன. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தார்கள். மேலும், 8 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் நேற்று அதிகம் பகிரப்பட்டு வந்தன.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கலைத் தெரிவித்தார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ. 2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ. 50 ஆயிரம் வழங்கிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.