தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்

திருவள்ளுவர் தினத்தையொட்டி காவி உடை அணிந்த திருவள்ளுவர் படத்துடன் தமிழக ஆளுநர் மாளிகை சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
படம் - twitter.com/rajbhavan_tn

தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது என்று தமிழ்நாட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருவள்ளுவர் தினத்தையொட்டி காவி உடை அணிந்த திருவள்ளுவர் படத்துடன் தமிழக ஆளுநர் மாளிகை சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இதேபோல தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ட்விட்டரில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்ததாவது:

தமிழினத்தில் பிறந்து அமிழ்தமிழில் அறம் உரைத்து உலகம் முழுமைக்குமான நெறிகள் சொன்ன வான்புகழ் வள்ளுவர் நாள் வாழ்த்துகள்!

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூகநீதிக் கோட்பாட்டையும் - முயற்சி மட்டுமே வெற்றியைத் தரும் என்ற தன்னம்பிக்கை ஊக்கத்தையும் - அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை என்ற கருத்தியலையும் வழிகாட்டியவர் வள்ளுவர்.

133 அடியில் சிலையும் - தலைநகரில் கோட்டமும் அமைத்துப் போற்றும் குறளோவியத் தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது.

என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in