மாநில அரசுகளுக்கு ₹1.42 லட்சம் கோடி வரிப்பகிர்வை வழங்கிய மத்திய அரசு

மாநில அரசுகளுக்கு ₹1.42 லட்சம் கோடி வரிப்பகிர்வை வழங்கிய மத்திய அரசு

இந்தக் கூடுதல் ஒதுக்கீட்டின் மூலம், மாநில அரசுகள் இப்போது பிப்ரவரி 2024-ல் மொத்தம் மூன்று தவணை வரிப் பகிர்வுகளைப் பெற்றுள்ளன.
Published on

நடப்பு நிதியாண்டில் மாநிலங்களுக்கான 3-வது தவணையாக ரூ. 1.42 லட்சம் கோடி வரிப்பகிர்வு நிதியை மத்திய நிதி அமைச்சகம் விடுவித்துள்ளது.

இந்த நடவடிக்கையானது பல்வேறு சமூக நலத் திட்டங்களுக்கும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் நிதியளிப்பதில் மாநில அரசு நிர்வாகங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்பப்படுகிறது.

இந்த சமீபத்திய நிதிப்பகிர்வு, பிப்ரவரி 12, 2024 அன்று முன்னதாக வழங்கப்பட்ட ₹71,061 கோடி வரிப்பகிர்வு தவணையைத் தொடர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூடுதல் ஒதுக்கீட்டின் மூலம், மாநில அரசுகள் இப்போது பிப்ரவரி 2024-ல் மொத்தம் மூன்று தவணை வரிப் பகிர்வுகளைப் பெற்றுள்ளன.

மாநிலங்களுக்கிடையேயான நிதி விநியோகம் கவனமாகத் திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலமும் அதன் தனிப்பட்ட தேவைகள் மற்றும் வளர்ச்சி முன்னுரிமைகளின் அடிப்படையில் ஒதுக்கீட்டைப் பெறுகிறது.

logo
Kizhakku News
kizhakkunews.in