மார்ச் 4-ல் இறுதியாகுமா காங்கிரஸ் தேர்தல் அறிக்கை?

இந்தக் குழுவுக்கு ப.சிதம்பரம் தலைவராக உள்ளார்.
காங்கிரஸ் தலைவர்கள்
காங்கிரஸ் தலைவர்கள்

காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக் குழுக் கூட்டம் மார்ச் 4-ல் கூட உள்ளது.

இக்கூட்டத்தின்போது, காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை இறுதி செய்யும் என்று தெரிய வந்துள்ளது. தேர்தல் அறிக்கைக் குழுவின் முதல் கூட்டம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்றது.

இந்தக் குழுவுக்கு, காங்கிரஸ் மாநிலங்கள் அவை உறுப்பினரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் தலைவராக உள்ளார். அமைப்பாளராக, சத்தீஸ்கர் முன்னாள் துணை முதல்வர் டி.எஸ்.சிங் தேவ் உள்ளார். கர்நாடக முதல்வர் சித்தராமையா, ஜெய்ராம் ரமேஷ், சசி தரூர், பிரியங்கா காந்தி வாத்ரா ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

மக்களவைத் தேர்தலுக்கான கட்சியின் அறிக்கை, "மக்களின் அறிக்கை" ஆக இருக்கும் என்றும், பொதுமக்கள் மின்னஞ்சல், வலைத்தளம் ஆகியவை மூலமாகப் பரிந்துரைகளை அனுப்பலாம் என்றும் பி.சிதம்பரம் கூறியிருந்தார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in