இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டிலிருந்து பாதியில் விலகிய அஸ்வின், 4-வது நாளில் மீண்டும் அணியுடன் இணையவுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்தியா, இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த இந்திய அணி 445 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 319 ரன்கள் எடுத்தது. இதில் இரண்டாவது நாள் ஆட்டத்தின்போது அஸ்வின் 7 ஓவர்கள் பந்துவீசி 37 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் என்ற சாதனையை அஸ்வின் படைத்தார். இவரது இந்த சாதனைக்கு வாழ்த்துகள் குவிந்தன.
அன்றைய நாள் இரவு தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் ராஜ்கோட் டெஸ்டிலிருந்து பாதியில் விலகி சென்னை திரும்பினார். இதனால், 3-வது நாள் ஆட்டத்தில் அஸ்வின் இல்லாமல் இந்திய அணி பந்துவீசியது.
இந்த நிலையில், அஸ்வின் மீண்டும் அணியில் இணையவுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்டின் 4-வது நாளில், உணவு இடைவேளைக்குப் பிறகு அவர் இந்திய அணியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அஸ்வினின் வருகை இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் பந்துவீச்சு மட்டுமின்றி, பேட்டிங்குக்கும் பலம் சேர்க்கவுள்ளது.