மேலும் இரு டெஸ்டுகளைத் தவறவிடும் விராட் கோலி

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மேலும் இரு டெஸ்டுகளை இந்திய பேட்டர் விராட் கோலி தவறவிடவுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மேலும் இரு டெஸ்டுகளை இந்திய பேட்டர் விராட் கோலி தவறவிடவுள்ளார்.

இந்த டெஸ்ட் தொடரில் தனிப்பட காரணங்களுக்காக முதல் இரு டெஸ்டுகளில் இருந்து விலகுவதாக கோலி அறிவித்தார். இதனால் ராஜ்கோட்டில் நடைபெறவுள்ள 3-வது டெஸ்டில் கோலி விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மேலும் இரு டெஸ்டுகளில் கோலி விளையாட மாட்டார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 5-வது டெஸ்டில் அவர் விளையாடுவதும் சந்தேகம் எனத் தெரிகிறது. முதல் டெஸ்டில் விளையாடுவதற்காக ஹைதராபாதுக்கு வந்த கோலி, திடீரென அணியிலிருந்து விலகினார். தற்போதைய சூழலில், முழு டெஸ்ட் தொடரையும் அவர் தவறவிடுவதற்கான வாய்ப்புகளே அதிகமாக உள்ளன.

2-வது டெஸ்டில் விளையாடாத ஜடேஜா, ராகுல் ஆகியோர் காயங்களில் இருந்து மீண்டு 3-வது டெஸ்டில் விளையாடத் தயாராகவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. ஓய்வு அளிக்கப்பட்ட சிராஜ், இந்திய அணியுடன் மீண்டும் இணையவுள்ளார். மேலும் 3-வது டெஸ்டுக்கு 10 நாள்கள் இடைவெளி இருப்பதால், ராஜ்கோட்டில் பும்ரா விளையாடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இரு டெஸ்டுகளின் முடிவில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in