ஐபிஎல்-லில் ரிஷப் பந்த் விளையாடுவார்: பாண்டிங் தகவல்

ஐபிஎல் 2024 போட்டியில் ரிஷப் பந்த் விளையாடுவார் என்று தில்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
ரிஷப் பந்த்
ரிஷப் பந்த்ANI

ஐபிஎல் 2024 போட்டியில் ரிஷப் பந்த் விளையாடுவார் என்று தில்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 2022-ல் கார் விபத்தில் சிக்கிய பிறகு தொழில்முறை கிரிக்கெட்டில் ரிஷப் பந்த் இன்னும் பங்கேற்கவில்லை. நேஷனல் கிரிக்கெட் அகாடமியில் தொடர்ந்து பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறார். தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக உள்ள ரிஷப் பந்த், இந்த வருட ஐபிஎல் போட்டியில் விளையாடுவார் என அந்த அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மெல்போர்னில் இதுபற்றி அவர் கூறியதாவது:

ஐபிஎல் போட்டியில் விளையாடுது குறித்து நம்பிக்கையுடன் உள்ளார் ரிஷப் பந்த். எந்த அளவுக்கு அவர் விளையாடுவார் என்பது தெரியாது. தற்போது ஓட்டப் பயிற்சியை அவர் மேற்கொள்வது குறித்து சமூகவலைத்தளங்களில் கண்டிருப்பீர்கள். ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்டத்தில் விளையாட இன்னும் ஆறு வாரங்கள் தான் உள்ளன. எனவே இந்த வருடம் அவர் விக்கெட் கீப்பராகவும் செயல்படுவாரா என்று தெரியாது. ஆனால் நான் அவரிடம் கேட்டால், நான் ஒவ்வொரு ஆட்டத்திலும் விளையாடுகிறேன், விக்கெட் கீப்பராகவும் நெ.4 பேட்டராகவும் என்றே நிச்சயமாகக் கூறுவார். எல்லா ஆட்டங்களிலும் விளையாடாவிட்டாலும் 10 ஆட்டங்களிலாவது அவரை விளையாட வைத்துவிட்டால் அது எங்களுக்கு போனஸ் தான். ரிஷப் பந்தால் கேப்டனாகச் செயல்பட முடியாவிட்டால் டேவிட் வார்னரே மீண்டும் கேப்டனாகச் செயல்படுவார் என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in