ஐசிசியின் சிறந்த டி20 வீரராக சூர்யகுமார் யாதவ் தேர்வு

தொடர்ந்து இரண்டாவது முறையாக சிறந்த சர்வதேச டி20 வீரருக்கான ஐசிசி விருதை சூர்யகுமார் யாதவ் பெறுகிறார்.
ஐசிசியின் சிறந்த டி20 வீரராக சூர்யகுமார் யாதவ் தேர்வு

2023-ம் ஆண்டுக்கான ஐசிசியின் சிறந்த சர்வதேச டி20 வீரராக இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதன்மூலம் தொடர்ந்து இரண்டாவது முறையாக சிறந்த சர்வதேச டி20 வீரருக்கான ஐசிசி விருதை சூர்யகுமார் யாதவ் பெறுகிறார்.

2023-ம் ஆண்டுக்கான விருதுகளை ஐசிசி அறிவித்து வருகிறது. 2023-ம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் அணியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து மொத்தம் 8 வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள். இந்த அணிக்கு ரோஹித் சர்மா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

சிறந்த டெஸ்ட் அணியில் இந்திய அணியிலிருந்து ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் இடம்பெற்றுள்ளார். இந்த அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், 2023-ம் ஆண்டுக்கான சிறந்த சர்வதேச டி20 வீரராக சூர்யகுமார் யாதவை ஐசிசி தேர்வு செய்துள்ளது. கடந்தாண்டில் இவர் 17 இன்னிங்ஸில் 155.95 ஸ்டிரைக் ரேட்டில் 48.86 சராசரியில் 733 ரன்கள் விளாசியிருக்கிறார்.

சிகந்தர் ராஸா, அல்பேஷ் ரம்ஜானி, மார்க் சாப்மேன் ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளி சூர்யா இந்த விருதை வென்றுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in