பிப். 22 அன்று மலையாளத்தில் வெளியான ‘மஞ்ஞுமல் பாய்ஸ்’ படம் தமிழகத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், உலகம் முழுவதும் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது.
இதன் மூலம் ரூ. 100 கோடி வசூல் செய்த 4-வது மலையாள படம் எனும் பெருமையை பெற்றது இப்படம். இதற்கு முன்பு 2016-ல் வெளியான ‘புலி முருகன்’, 2019-ல் ‘லுசிஃபர்’, 2023-ல் ‘2018’ ஆகிய படங்கள் ரூ. 100 கோடி வசூல் செய்தது. இந்நிலையில் ‘மஞ்ஞுமல் பாய்ஸ்’ இப்பட்டியலில் இணைந்துள்ளது.
கொடைக்கானலில் உள்ள குணா குகையில் 2006-ல் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் சிதம்பரம் இயக்கிய படம் ‘மஞ்ஞுமல் பாய்ஸ்’.
படம் வெளியான முதல் நாளிலிருந்தே உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்று வந்தது. இதைத் தொடர்ந்து இப்படம் வெளியான இரண்டே வாரங்களில் வசூலில் சாதனை செய்துள்ளது.