பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹா வீட்டுக் கட்டுமானப் பணிகள் நிறுத்தம்

கொடைக்கானலில் நடிகர்கள் பிரகாஷ் ராஜ் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் அரசு விதிகளை...
நடிகர்களின் வீட்டுக் கட்டுமானப் பணிகள் நிறுத்தம்
நடிகர்களின் வீட்டுக் கட்டுமானப் பணிகள் நிறுத்தம்@prakashraaj

கொடைக்கானலில் நடிகர்கள் பிரகாஷ் ராஜ் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் அரசு விதிகளை மீறிக் கட்டிய வீட்டுக் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நடிகர்கள் பிரகாஷ் ராஜ் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் அரசு விதிகளை மீறி வீட்டுக் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டதாகக் கடந்த செப்டம்பர் மாதம் புகார் அளிக்கப்பட்டு, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்நிலையில் அவர்களின் வீட்டுக் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுமான பணிகளை நிறுத்த நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில் இரு நடிகர்களும் கட்டுமானப் பணிகளை உரிய அனுமதியின்றி மேற்கொண்டதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in