பேருந்து நிறுத்தங்களில் டிஜிட்டல் பலகை: சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் முடிவு

2025 ஜூலையில் அனைத்து மாநகர பேருந்துகளிலும் இந்த வசதி கொண்டு வரப்படும் என சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்@MtcChennai

மாநகரப் பேருந்துகள் வந்து செல்லும் நேரத்தைப் பயணிகள் எளிதாக அறியும் வகையில், 71 பேருந்து நிலையங்கள் மற்றும் 500 பேருந்து நிறுத்தங்களில், டிஜிட்டல் பலகை பொருத்தப்பட உள்ளதாகச் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் 700 -க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் தினமும் ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் அடுத்த பேருந்து வரும் நேரம், பேருந்து நிறுத்தங்களில் நீண்ட நேரம் காத்திருப்பது போன்ற பல சிரமங்களை மக்கள் சந்திப்பதாகத் தொடர்ந்து புகார் அளித்தனர். இந்நிலையில் மாநகர பேருந்துகள் வந்து செல்லும் நேரத்தைப் பயணிகள் எளிதாக அறியும் வகையில் டிஜிட்டல் பலகை பொருத்தப்பட உள்ளது.

ஆரம்பத்தில், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் 50 பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்படும் என்றும், 2025 ஜூலையில் அனைத்து மாநகர பேருந்துகளிலும் இந்த வசதி கொண்டு வரப்படும் என சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in