5-வது டெஸ்ட்: மீண்டும் அணியில் இடம்பெற்ற பும்ரா

கடந்த மூன்று ஆட்டங்களைத் தவறவிட்ட ராகுல், காயம் காரணமாக இந்த டெஸ்டில் இருந்தும் விலகியுள்ளார்.
மீண்டும் அணியில் இடம்பெற்ற பும்ரா
மீண்டும் அணியில் இடம்பெற்ற பும்ராANI

5-வது டெஸ்டுகான இந்திய அணியில் மீண்டும் இடம்பெற்றார் பும்ரா.

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் தரம்சாலாவில் மார்ச் 7 அன்று தொடங்குகிறது. இந்த டெஸ்டுகான இந்திய அணியில் மீண்டும் இடம்பெற்றார் பும்ரா. 4-வது டெஸ்டில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. பும்ரா முதல் மூன்று டெஸ்டுகளில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

கடந்த மூன்று ஆட்டங்களைத் தவறவிட்ட ராகுல், காயம் காரணமாக இந்த டெஸ்டில் இருந்தும் விலகியுள்ளார். ராகுல் மருத்துவரை ஆலோசிக்க லண்டன் சென்றதாக தகவல் வெளியானது. ராகுல், ஐபிஎல் போட்டியில் ஒரு சில ஆட்டங்களைத் தவறவிடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ரஞ்சி கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் பங்கேற்பதற்காக வாஷிங்டன் சுந்தரும் அணியில் இருந்து விலகியுள்ளார். ரஞ்சி கோப்பை ஆட்டம் முடிந்த பின் தேவைப்பட்டால் அவர் அணியில் இணைவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

5-வது டெஸ்டுகான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெயிஸ்வால், படிக்கல், ரஜத் படிதார், சர்ஃபராஸ் கான், கே.எஸ். பரத் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜுரெல் (விக்கெட் கீப்பர்), ஆர். அஸ்வின், ஆர். ஜடேஜா, அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ், முஹமது சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), ஆகாஷ் தீப்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in