கலைஞர் கருணாநிதி நினைவிடம்: பிப். 26-ல் திறப்பு

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தை பிப். 26 அன்று திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
கலைஞர் கருணாநிதி
கலைஞர் கருணாநிதிANI

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் பிப். 26 அன்று திறக்கப்பட உள்ளது. கலைஞர் நினைவிடத்தைத் திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

கடந்த 2018-ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி காலமானார். இதைத் தொடர்ந்து சென்னை மெரினாவில் அண்ணா நினைவிட வளாகத்தில் கலைஞர் கருணாநிதி நினைவிடம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இதன் பிறகு 2021 முதல் கட்டுமானப் பணிகள் நடைபெற்றது.

இந்நிலையில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் பிப். 26 அன்று கருணாநிதி நினைவிடம் திறக்கப்பட உள்ளது. மேலும் அறிஞர் அண்ணா நினைவிடமும் புதுப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் அதனைத் திறந்து வைக்கிறார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in