500 டெஸ்ட் விக்கெட்டுகள்: அஸ்வினின் மனைவி உருக்கமான பதிவு

என்ன ஒரு அற்புதமான சாதனை. உங்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்.
அஸ்வினின் மனைவி உருக்கமான பதிவு
அஸ்வினின் மனைவி உருக்கமான பதிவு@prithinarayanan

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் அஸ்வின் தனது 500-வது விக்கெட்டை வீழ்த்தினார். இதன் பிறகு அஸ்வின் தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜ்கோட் டெஸ்டிலிருந்து பாதியில் விலகி சென்னை திரும்பினார். இதனால், 3-வது நாள் ஆட்டத்தில் அஸ்வின் இல்லாமல் இந்திய அணி பந்துவீசியது. இதைத் தொடர்ந்து அஸ்வின் மீண்டும் ஆட்டத்தின் 4-வது நாளில் அணியுடன் இணைந்தார். 2-வது இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். இது அஸ்வினின் 501-வது விக்கெட். இந்த டெஸ்டில் 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி. இந்த வெற்றியைத் தொடர்ந்து அஸ்வினின் மனைவி ப்ரீத்தி தன்னுடைய சமூக வலைத்தளங்களில் ஒரு உருக்கமான பதிவை வெளியிட்டார்.

அஸ்வினின் மனைவி ப்ரீத்தி கூறியதாவது:

“500 விக்கெட்டுகளை ஹைதராபாத்தில் விரட்டினோம், அது நடக்கவில்லை. விசாகப்பட்டினத்திலும் அது நடக்கவில்லை. எனவே 499 இருந்த சமயத்தில் ஒரு டன் இனிப்புகளை வாங்கி வீட்டில் எல்லோருக்கும் கொடுத்தேன். இதன் பிறகு 500-வது விக்கெட் அமைதியாக வந்து சென்றது. 500 மற்றும் 501-க்கு இடையில் நிறைய நடந்தது. எங்கள் வாழ்வின் மிக நீளமான 48 மணி நேரம். ஆனால், இது 500-வது விக்கெட்டுக்காக. என்ன ஒரு அற்புதமான சாதனை. உங்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். நாங்கள் உங்களை நேசிக்கிறோம்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in