கடந்த இரண்டரை ஆண்டுகளில் பலமடங்கு உயர்ந்த நெல்லை வளர்ச்சி: உதயநிதி ஸ்டாலின்

கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 6 லட்சம் கோடி ஒன்றிய அரசுக்கு வரியாகச் செலுத்தியுள்ளோம், ஆனால் ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்குத் திருப்பி தந்திருப்பது வெறும் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி.
உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்ANI

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

திறப்பு விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

“கடந்த 10 ஆண்டுகளை விட நெல்லையின் வளர்ச்சி, கடந்த ஆண்டுகளில் பலமடங்குகளாக உயர்ந்திருப்பதை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். பல்வேறு நிதி நெருக்கடி சூழலிலும் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக நமது தமிழ்நாடு முன்னேறிக்கொண்டு இருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 6 லட்சம் கோடி ரூபாய் ஒன்றிய அரசுக்கு வரியாகச் செலுத்தியுள்ளோம், ஆனால் ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்குத் திருப்பி தந்திருப்பது வெறும் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி தான். வெள்ள நிவாரணமாக ஒன்றிய அரசு 1 ரூபாய் கூட தராத சூழலிலும், முதல்வர் ஸ்டாலின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 6 ஆயிரம் கொடுத்தார். இது தான் திராவிட மாடல் அரசு ” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in