இங்கிலாந்து X1 அறிவிப்பு: மூன்றாவது டெஸ்டில் களமிறங்கும் மார்க் வுட்

முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணியில் ஒரே ஒரு வேகப்பந்து வீச்சாளராக மார்க் வுட் களமிறங்கினார்.
மார்க் வுட்
மார்க் வுட்ANI

இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் களமிறங்குகிறார் மார்க் வுட்.

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் ராஜ்கோட்டில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. முதல் இரு டெஸ்டுகள் முடிந்த நிலையில் இத்தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்த டெஸ்டுகான இங்கிலாந்து அணியில் சோயிப் பஷீருக்கு பதிலாக மார்க் வுட் இடம்பெற்றுள்ளார். முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணியில் ஒரே ஒரு வேகப்பந்து வீச்சாளராக மார்க் வுட் களமிறங்கினார். அந்த டெஸ்டில் வுட் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. இதைத் தொடர்ந்து மூன்றாவது டெஸ்டில் மார்க் வுட் விளையாட உள்ளார். ராஜ்கோட்டில் உள்ள ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவும் வகையில் இருக்கும் என்ற காரணத்தால் மார்க் வுட் தேர்வு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்திய அணியில் கோலி, ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் விலகியுள்ளனர்.

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டுக்கான இங்கிலாந்து அணி:

ஸாக் கிராலி, பென் டக்கெட், ஆலி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் ஃபோக்ஸ், மார்க் வுட் , டாம் ஹார்ட்லே, ரெஹான் அஹமது, ஜேம்ஸ் ஆண்டர்சன்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in