உயிரிழந்த ரசிகர்: வீட்டிற்கு சென்று ஆறுதல் சொன்ன சூர்யா

மறைந்த ரசிகரின் வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார், நடிகர் சூர்யா.
சூர்யா
சூர்யா@Suriya_offl

மறைந்த ரசிகரின் வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார், நடிகர் சூர்யா.

கடந்த பிப்.7 அன்று நடிகர் சூர்யா நற்பணி இயக்கத்தின் விழுப்புரம் மாவட்ட தலைவரான மணிகண்டன் சாலை விபத்தில் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். இந்நிலையில் சூர்யா மறைந்த மணிகண்டனின் வீட்டிற்குச் சென்று அவரின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார் நடிகர் சூர்யா.

இதே போல் கடந்த ஆண்டும் சூர்யாவின் ரசிகர் ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, சூர்யா மறைந்த அந்த ரசிகரின் வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in