பாஜகவுடன் கூட்டணி இருக்கிறதா என்ற கேள்வியை இனி கேட்க வேண்டாம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “பாஜகவுடன் கூட்டணி இல்லை” என பேசினார்.
எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: “பாஜகவுடன் மறைமுக உறவு வைத்துள்ளதாக சிலர் கூறுகிறார்கள். அதிமுக-வை பொறுத்தவரை 25.9.2023 அன்றே பாஜகவுடன் கூட்டணி இல்லை என அறிவித்துவிட்டோம். ஆனால் அதன் பிறகு எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களும், பத்திரிக்கையாளர்களும் வேண்டும் என்றே தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். எனவே பாஜகவுடன் கூட்டணி இல்லை என இறுதியாகவும், உறுதியாகவும் கூறுகிறோம். இனி பாஜகவுடன் கூட்டணி இருக்கிறதா என்ற கேள்வியை கேட்க வேண்டாம். சரியான நேரத்தில் அதிமுக கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும்” என்றார்.