நடிகர் ரஜினி சிறப்புத் தோற்றத்தில் நடித்த ‘லால் சலாம்’ படம் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினி தனது 171-வது படம் குறித்த அப்டேட்டை கொடுத்தார்.
ரஜினி பேசியதாவது: “லால் சலாம் படம் ரசிகர்களுக்குப் பிடித்ததாகக் கேள்விப்பட்டேன். படம் வெற்றி பெற்றுள்ளது. படகுழுவினருக்கு வாழ்த்துகள். வேட்டையன் படப்பிடிப்பு 80% முடிந்தது. இதைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்கவுள்ளேன்” என்றார்.
மேலும் செய்தியாளர் ஒருவர் அரசியல் குறித்து கேள்வி கேட்டதற்கு, “மன்னிக்கவும். அரசியல் கேள்விகள் வேண்டாம்” எனப் பதிலளித்தார்.
‘ஜெய்பீம்’ படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘வேட்டையன்’. இப்படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில் போன்ற பலரும் நடித்து வருகின்றனர்.