மே.இ தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷமார் ஜோசப்பை ரூ. 3 கோடிக்கு வாங்கியது லக்னெள அணி.
இங்கிலாந்து வீரர் மார்க் வுட்டுக்கு பதிலாக ஜோசப் லக்னெள அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தனது அறிமுக டெஸ்டின் முதல் பந்திலேயே ஸ்மித்தின் விக்கெட்டை வீழ்த்தியதுடன், அத்தொடரை சமன் செய்ய முக்கியமான காரணமாக இருந்தார் ஷமார் ஜோசப்.
டி20 உலகக் கோப்பையைக் கருத்தில் கொண்டு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வுட்டின் பணிச்சுமையைக் குறைக்க, அவரை ஐபிஎல் போட்டியிலிருந்து விலகும்படி கேட்டுக்கொண்டதாகத் தெரிகிறது. 2022 ஐபிஎல் தொடருக்கு முன்பு ரூ. 7.50 கோடிக்கு மார்க் வுட்டை வாங்கியது லக்னெள அணி. முழங்கை காயத்தால் அவர் 2022 ஐபிஎல் தொடரில் பங்கேற்கவில்லை. ஐபிஎல் 2023-ல் வுட் 4 ஆட்டங்களில் விளையாடி 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.