இங்கிலாந்து தொடர்: கடைசி மூன்று டெஸ்டுகளுக்கான இந்திய அணி அறிவிப்பு

முதல் இரு டெஸ்டுகளை தவறவிட்ட விராட் கோலி முழுத் தொடரிலும் விளையாடவில்லை. மேலும் காயம் காரணமாக ஸ்ரேயஸ் ஐயரும் அணியிலிருந்து விலகியுள்ளார்.
இந்திய அணி
இந்திய அணி ANI

இந்தியா - இங்கிலாந்து இடையிலான கடைசி மூன்று டெஸ்டுகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் இரு டெஸ்டுகள் முடிந்த நிலையில் இத்தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்நிலையில் 3-வது டெஸ்ட் ராஜ்கோட்டில் வருகிற 15 அன்று நடைபெறுகிறது. முதல் இரு டெஸ்டுகளை தவறவிட்ட கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக அடுத்த மூன்று டெஸ்டுகளில் இருந்தும் விலகியுள்ளார். மேலும் முதுகுத் தசைப்பிடிப்பு காரணமாக ஸ்ரேயஸ் ஐயரும் அணியில் இடம்பெறவில்லை. கடந்த டெஸ்டில் காயத்தால் விலகிய ராகுல் மற்றும் ஜடேஜா ஆகியோர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் கோலிக்கு பதிலாக ஆகாஷ் தீப் முதல் முறையாக இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்.

கடைசி மூன்று டெஸ்டுகளுக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெயிஸ்வால், , கே.எல் ராகுல், ஆகாஷ் தீப், ரஜத் படிதார், வாஷிங்டன் சுந்தர், சர்ஃபராஸ் கான், கே.எஸ். பரத் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜுரெல் (விக்கெட் கீப்பர்), ஆர். அஸ்வின், ஆர். ஜடேஜா, அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ், முஹமது சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்).

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in