ராகுல் டிராவிட்
ராகுல் டிராவிட் ANI

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கே.எல். ராகுல் விக்கெட் கீப்பராக விளையாட மாட்டார் - ராகுல் டிராவிட்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கே.எஸ் பரத் அல்லது துருவ் ஜூரல் விக்கெட் கீப்பராக விளையாடுவார்கள் என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கே.எஸ் பரத் அல்லது துருவ் ஜூரல் விக்கெட் கீப்பராக விளையாடுவார்கள் என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் ஜன. 25 அன்று ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. இத்தொடரில் கே.எல். ராகுல் விக்கெட் கீப்பராக விளையாட மாட்டார் என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ரிஷப் பந்த் காயத்தால் விலகியதைத் தொடர்ந்து டெஸ்ட் தொடர்களில் இஷான் கிஷன், கே.எல். ராகுல், கே.எஸ் பரத் ஆகியோர் விக்கெட் கீப்பர்களாக விளையாடி வந்தனர். சமீபத்தில் நடந்த தெ.ஆ. டெஸ்ட் தொடரில் கே.எல். ராகுல் விக்கெட் கீப்பராக செயல்பட்டார். இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கே.எஸ் பரத் அல்லது துருவ் ஜூரல் விக்கெட் கீப்பராக விளையாடுவார்கள் என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராகுல் டிராவிட் பேசியதாவது: “இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கே.எல். ராகுல் விக்கெட் கீப்பராக விளையாட மாட்டார். அவருக்குப் பதிலாக கே.எஸ் பரத் அல்லது துருவ் ஜூரல் விக்கெட் கீப்பராக விளையாடுவார்கள். தெ.ஆ. டெஸ்ட் தொடரில் கே.எல். ராகுல் தன் கடமையைச் சிறப்பாக செய்தார். இருப்பினும் இத்தொடரில் கே.எஸ் பரத் அல்லது துருவ் ஜூரலுக்கு வாய்ப்பு வழங்கப்படும். இங்குள்ள சூழ்நிலைக்கேற்ப இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in