இந்தியாவுடனான டெஸ்ட் தொடர்: ஹாரி புரூக் விலகல்

5 டெஸ்டிலும் அவர் பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹாரி புரூக்
ஹாரி புரூக்@icc

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இத்தொடரிலிருந்து ஹாரி புரூக் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் ஜன.25 அன்று ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் முதல் முறையாக இந்திய மண்ணில் விளையாட இருந்த ஹாரி புரூக் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ளார். 5 டெஸ்டிலும் அவர் பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணிக்கு இது பெரிய பின்னடைவாக அமையும். அவருக்குப் பதிலாக மாற்று வீரராக லாரென்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஹாரி புரூக் விலகியது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கூறியதாவது: "இந்திய டெஸ்ட் சுற்றுப்பயணத்திலிருந்து விலகி, தனிப்பட்ட காரணங்களுக்காக ஹாரி புரூக் உடனடியாக நாடு திரும்ப உள்ளார். அவர் இந்தியா திரும்பமாட்டார். அவரது குடும்பத்தினர் இந்த நேரத்தில் தனியுரிமையை எதிர்பார்க்கின்றனர். எனவே ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் அவர்களின் விருப்பத்திற்கு மதிப்பளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்றது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in